10 Dec 2015

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அற்புதமான ELCOM திட்டம்



இது ஒரு புதிய பயணம்.
அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் ஒரு புதுமையை புகுத்தியுள்ளது அரசு.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்ப்பதற்காக, ELCOM (English Language Communication) என்றொரு திட்டம்.
முதற்கட்டமாக 10 மாவட்டங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ஆசிரியர்கள்.ஆக மொத்தம் 100 ஆசிரியர்கள்-அவர்களது 100 பள்ளிகள்.
ஒவ்வொருவருக்கும் டேப் மற்றும் ப்ளூடூத் வசதியுள்ள ஸ்பீக்கர்.
டேப் இல் இருக்கக் கூடிய அப்ளிகேஷனைப் பயன்படுத்தி சுமார் 40 மாணவர்களைக் கொண்ட வகுப்பிற்கு பாடம் நடத்த வேண்டும்.
முழுக்க முழுக்க ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தி பேச்சாற்றலை வளர்ப்பதற்கான திட்டமிது.
ஒவ்வொரு வாரமும் என்ன நடத்த வேண்டுமென திட்ட வல்லுனர்களால் வாட்ஸப் குழு வழியாக தகவல் அனுப்பப்படும்.
அதை நடத்திவிட்டு மாணவர்களின் செயல்பாடுகளை வீடியோ பதிவு செய்து அதே வாட்ஸப் குழுவில் பகிர வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் மீளாய்வுக் கூட்டம் நடத்தப்படும்.
திட்டம் மேலும் மேலும் செழுமை படுத்தப்படும்.
படத்தில் என்னுடனிருக்கும் Dinesh Anand Muthu Raman RK Adaikkalamani Vaseekaran ஆகியோர் எங்கள் கடமையைத் தான் செய்து வருகிறோம்.
அதற்கொரு அங்கீகாரமாக அரசு இந்தப் பணியை நம்பிக்கையோடு வழங்கியுள்ளது.
அந்த நம்பிக்கையை காப்பாற்றவும், அரசுப் பள்ளி மாணவர்களை இன்னும் மிளிரச் செய்யவும் மேலும் மேலும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.
என்னுடன் இத்திட்டத்தில் பயணிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சார்பாக எம்மீது நம்பிக்கை கொண்ட அத்துணை பேருக்கும் நன்றி.
எமது லட்சியமும்,கடமையும் அரசுப் பள்ளி மாணவர்களை உலக அரங்கில் தலைநிமிரச் செய்வதே!